மக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

மலரும் பூமி 19.08.2009

வளர்சோலை:
இன்றைய வளர்சோலை நிகழ்சியில் "கோகோ" சாகுபடி குறித்தான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காட்பரீஸ் நிறுவன இணை, துணைத் தலைவர் திரு.மகுடபதி, எர்ணாகுளம் (0484-2575505) அவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தார்கள்.

* இந்தியாவில் கோகோவின் தேவை 20,000.00 டன்களாக உள்ள நிலையில் அதில் பகுதியான 10000 டன் உற்பத்தி என்ற அளவிலேயே உள்ளது.
* இவர்களால் 20 கன்று உற்பத்தி நிலையங்கள் (நர்சரி) மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள், தேசிய தோட்டக்கலை வளர்ச்சி மையம மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
* உலக அளவில் இதன் உற்பத்தி 35 இலட்சம் டன்களாக உள்ளது.
* உப்புத் தண்ணி இல்லாத எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் வளரும் தன்மை கொண்டது.

தொடர்ந்து இராஜேஷ், மேலாளர், பொள்ளாச்சி (99524 11947) அவர்கள் கூறியவை:
* தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் உள்ள கன்று உற்பத்தி நிலையங்கள் மூலம் 16 மாவட்டங்களில் "நேசனல் ஹர்டிகல்ச்சர் மிசன்" வழி விற்பனை செய்யப்படுகின்றன.
* முதல் மூன்று வருடங்களுக்கு அரசு மானியமாக உரூபாய் ௧௧,௨௫0.00 வழங்கப்படுகிறது.
* 2007 - 6000, 2008-09 - 15000, 2009-10 - 200000 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
* தமிழ்நாட்டில் 200 டன் உற்பத்தி தற்போது செய்யப்படுகிறது.
* ஒரு ஏக்கரில் 20000 முதல் 25000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.
* பயிரிடும் முன்பு கண்டிப்பாக மண், நீர் பரிசோதனை அவசியம்.

அடுத்து, முனை.இராசமணி, கோவை வேளாண் பல்கலைக்கழகம் (98657 96667) அவர்கள் கூறியது,
* செடிகளை 10 அடி முதல் 12 அடி உயரத்தில் பராமரிக்க வேண்டும்.
* 10 -12 அடி இடைவெளியில் இருக்கவேண்டும்.
* செடி வைக்க அரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுத்து வைக்க வேண்டும்.
* இவை வளர 50-70% நிழல் தேவை, அதிகப்படியான வெயில் வளர்ச்சியைப் பாதிக்கும்.
* இவற்றிற்கு தன் மகரந்த சேர்கை கிடையாது என்பதால், இவற்றை தனியே வளர்த்தெடுத்து பயிரிடவீண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு